பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் - 09.08.2026 பிற்பகல் 4 மணியளவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
30க்கும் அதிகமான பிரதேச பல்துறை கலைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்
இவ் வருடம் நடைபெறவுள்ள இலக்கிய விழா, "வாழை மடல் " மலர் வெளியீடு , மாதாந்தம் கலை நிகழ்வுகளை நடத்துதல் என்பன தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
மேலும் கலாசார பேரவை மற்றும் அதிகார சபைக்கான தெரிவும் இடம் பெற்றது













