“அத்தம” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தும் முன்ஆயத்த கலந்துரையாடல்
க்ளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் “தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் முன்ஆயத்த கலந்துரையாடல் நேற்று (06) வாழைச்சேனை – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.













