பிரியாவிடை கெளரவிப்பு நிகழ்வு | 15 ஜூன் 2026
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் அவர்களின் தலைமையில், ஓய்வுபெற்றுச் செல்லும் உமர்தீன் ரஜீதா (SDO) மற்றும் இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆதம்பாவா பஸ்லி ஆகியோருக்கான பிரியாவிடை கெளரவிப்பு நிகழ்வு 15 ஜூன் 2026 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வை வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கம் சிறப்பாக ஏற்பாடு செய்தது. இருவருக்குமான அன்பளிப்புகள் பிரதேச செயலக கிளை சார்பில் வழங்கி வைக்கப்பட்டன. நீண்டகாலம் சேவையாற்றிய இவ்விரு உத்தியோகத்தர்களையும் செயலகக் குடும்பம் அன்புடன் வழியனுப்பிவைத்தது.













