பாடசாலை மாணவர்களுக்கான மத்தியஸ்தப் பயிற்சி செயலமர்வு — இறுதி நாள் | 11 ஜூன் 2026

"பிணக்குகள் குறைந்து, மகிழ்ச்சியால் நிரம்பிய அமைதியான பாடசாலை சூழலை உருவாக்குவோம்" என்ற தொனிப்பொருளில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவும் கல்வி அமைச்சும் இணைந்து நடத்திய மூன்று நாள் மத்தியஸ்தப் பயிற்சி செயலமர்வின் இறுதி நாள் நிகழ்வு 11 ஜூன் 2026 அன்று மட் தியாவட்டவான் அறபா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் ஏ. ஜுமானா ஹஸீன், பாடசாலை அதிபர் எம்.ஏ. அஸீஸ் (SLPS), மாவட்ட மத்தியஸ்தப் பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம். ஆஸாத், மாவட்ட பாடசாலை மத்தியஸ்த இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். அஜுன் (நளீமி) ஆகியோர் கலந்துகொண்டனர்.

வளவாளர்களாக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எல். ஆஷாத், திருமதி நதீசன் ஜீவிதா, திருமதி இம்திஸா மற்றும் பொறுப்பாசிரியர் திருமதி சமீனா நஜீம் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர். இப்பயிற்சி செயலமர்வு மாணவர்களிடையே வன்முறையற்ற தொடர்பாடல், முரண்பாடுகளை சமரசமான முறையில் தீர்க்கும் திறன் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சிறப்பாக நடைபெற்றது.

News & Events

18
අගෝ2026
கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் | 17.08.2026

கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் | 17.08.2026

கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல்...

18
අගෝ2026
பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் | 09.08.2026

பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் | 09.08.2026

பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு...

Scroll To Top