புனாணை கிழக்கு AC-67 விவசாய வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

02 ஜூன் 2026புனாணை கிழக்கு AC-67 விவசாய வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு | 02 ஜூன் 2026"வளமான நாடு – அழகான வாழ்க்கை" என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் பிரஜாசக்தியின் "ஆயிரம் கிராமங்கள் – ஆயிரம் கருத்திட்டங்கள்" திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புனாணை கிழக்கு ரிதிதென்ன பிரதேசத்தின் AC-67 விவசாய வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 02 ஜூன் 2026 அன்று நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம். ஸாஹித், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல். சமீம், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எம்.ஏ.சி. நியாஸ்தீன் ஹாஜியார், புனாணை கிழக்கு பிரஜாசக்தி தலைவர் ஐ.எல். சமட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

வெலிக்கந்த மகாவலி வதிவிடத்திட்ட முகாமையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ரிதிதென்ன விவசாய அமைப்பு உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், விவசாய உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் ஊக்கமளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

News & Events

18
අගෝ2026
கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் | 17.08.2026

கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் | 17.08.2026

கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல்...

18
අගෝ2026
பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் | 09.08.2026

பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் | 09.08.2026

பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு...

Scroll To Top