கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல்
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டுக்கான வாழ்வாதார சமுர்த்தி மற்றும் சமூக மேம்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ், வறுமைக்குட்பட்ட 25 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (17) சமுர்த்தி மகாசங்க மண்டபத்தில் இடம்பெற்றது.













