தேசிய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி வார - மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு | 18 ஜூலை 2026
"வியத்தகு சிறுவர் உலகத்திற்கு ஒளிவிளக்காகும் அன்பான குடும்பம்" என்ற தொனிப்பொருளில் ஜூலை 14–20 வரை நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் தேசிய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி வாரத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு 18 ஜூலை 2026 அன்று கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எஸ். சுதர்சினி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஏ. தாஹிர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம். ஸாஹித், முன்பிள்ளைப்பருவ மாவட்ட இணைப்பாளர் ஏ. முரளிதரன், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். சர்ஜுன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் முன்பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். நிகழ்வின் நிறைவில் பங்கேற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.













