பிரஜாசக்தி சபை பிரதிநிதிகளுக்கு போசனை தொடர்பான பன்முகத்துறை அணுகுமுறைகள் குறித்து பயிற்சி - 14.07.2026
போசனைக்கான பன்முகத்துறைசார் செயற்பாட்டுத் திட்டத்தின் அணுகுமுறைகளை பிரஜாசக்தி சபைகளின் பிரதிநிதிகளுக்கு அறிமுகப்படுத்தும் பயிற்சித் திட்டம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பிரதேசத்தின் கிராம மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள ஒவ்வொரு பிரஜாசக்தி சபையிலிருந்தும் தலா மூன்று பிரதிநிதிகள் பங்கேற்ற இந்நிகழ்வில், போசனை மேம்பாட்டுக்கான பன்முகத்துறை அணுகுமுறைகள், சமூக மட்ட செயற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. மாவட்ட செயலகத்தின் விடய உத்தியோகத்தர்கள் வளவாளர்களாக கலந்துகொண்டு பயிற்சியை நடத்தினர்.
இந்நிகழ்வின் மூலம் சமூக மட்டத்தில் போசனை தொடர்பான விழிப்புணர்வையும் ஒருங்கிணைந்த பன்முகத்துறைசார் செயற்பாடுகளையும் வலுப்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.













