கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை — புனாணை கிழக்கு | 02 ஜூலை 2026
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட புனாணை கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் ரிதிதென்ன, ஜெயந்தியாய பொதுமக்களுக்கான நடமாடும் சேவை 02 ஜூலை 2026 காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை புனாணை கிழக்கு மட்/மம இக்ராஹ் வித்தியாலயத்தில் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் பிரதேச சமூக மட்ட அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் நிர்வாகம், பதிவாளர், சமூக சேவை, சமுர்த்தி, முதியோர் / மாற்றுத்திறனாளி, விவசாயம், காணி, கலாசாரம், ஆயுர்வேதம், மீன்பிடி, நடமாடும் மருத்துவம், பொதுச்சுகாதாரம், கால்நடை வைத்தியம், தென்னை அபிவிருத்தி, மகாவலி அபிவிருத்தி உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட அரச திணைக்கள சேவைகள் வழங்கப்பட்டன.
300 பொதுமக்கள் வருகை தந்து சேவைகளைப் பெற்றனர். விசேடமாக 250 மாணவர்களும் FPA மருத்துவ முகாமில் பயன்பெற்றனர். க.பொ.த. சாதாரண / உயர் தர சிறந்த மாணவர்களுக்கு பரிசில்கள், சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள், இரண்டு முன்பள்ளிகளின் மாணவர்களுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டன. பதவிநிலை உதவியாளர் ஏ.எஸ். ஜெமீல் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்களிப்பு வழங்கிய அனைத்து அமைப்புகளுக்கும் பிரதேச செயலாளர் நன்றி தெரிவித்தார்.













