Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsNews & Events
Government Service Centers
Home
உலக சுற்றாடல் தின நிகழ்வு|05.06.2026
உலக சுற்றாடல் தின நிகழ்வு|05.06.2026
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, வாழைச்சேனையில் அமைந்துள்ள ஏ.எச். பாலர் பாடசாலையில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று உதவி பிரதேச செயலாளர் திருமதி ஜுமானா ஹஸீன் அவர்களின் தலைமையில் 2026.06.05 ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சர்ஜூன், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. அஸ்ரப், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. தாசிம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் திரு. நிஸாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சிறுவர்களிடையே சுற்றாடல் தொடர்பான பொறுப்புணர்வை வளர்ப்பதும் இந்நிகழ்வின் பிரதான நோக்கமாக அமைந்தது.
கடமைகளைச் செய்வோம், உரிமைகளை வெள்வோம்
"கடமைகளைச் செய்வோம் — உரிமைகளை வெல்வோம்" | வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை|04.06.2026
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், "கடமைகளைச் செய்வோம் — உரிமைகளை வெல்வோம்" என்ற தொனிப்பொருளில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ஏ. ஜூமானா கஸீன் அவர்கள் மனோகரி உள ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தை செயன்முறை ரீதியாக மாணவர்களுக்கு வழங்கினார். சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ. நஜிப்கான் தொற்றாநோய்கள் தொடர்பாகவும், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஜி.எஸ். நிலந்தி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாகவும் விழிப்புணர்வு வழங்கினர்.
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.ஆர். தாஸிம், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் பீ. மகேந்திரன், உளவளத்துணை உத்தியோகத்தர் எஸ். விக்கேனஸ்வரி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கோறளைப்பற்று மத்தியில் இரண்டாம் காலாண்டு பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் | 03 ஜூன் 2026
கோறளைப்பற்று மத்தியில் இரண்டாம் காலாண்டு பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் | 03 ஜூன் 2026
கோறளைப்பற்று மத்தியில் இரண்டாம் காலாண்டு பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் | 03 ஜூன் 2026பிரதேச மட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் சிறுவர் நலன் தொடர்பாக சேவையாற்றும் அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டு பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் 03 ஜூன் 2026 காலை 9.30 மணிக்கு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் ஏ. ஜுமானா ஹஸீன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம். ஸாஹித், சமுர்த்தி முகாமையாளர் எம்.எல்.ஏ. மஜீத், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம். தாஹிர், மாவட்ட சிறுவர் உரிமைகள் உத்தியோகத்தர் ரீ. மதிராஜ், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் பி. மகேந்திரன், சிறுவர் உரிமைகள் உத்தியோகத்தர் ஏ.எம்.ஆர். தாஸிம், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். சர்ஜுன், உளவளத் துணை ஆலோசகர் எஸ். விக்கினேஸ்வரி, மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.எம். நெளபர் ஆகியோரும், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பொலிஸ் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பாடசாலை இடைவிலகல், மாணவர் போக்குவரத்து வசதிகள், பாடசாலை வரவு மேம்பாடு மற்றும் சிறுவர் அபிவிருத்திக் குழுக்களின் செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் முழுமையான அபிவிருத்தியை உறுதிப்படுத்த பல்துறை நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கான அனுசரணையை 'ஸெரி' நிறுவனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் புனாணை கிழக்கு விவசாய வீதிக்கான அடிக்கல் நடல் நிகழ்வு
புனாணை கிழக்கு AC-67 விவசாய வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
02 ஜூன் 2026புனாணை கிழக்கு AC-67 விவசாய வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு | 02 ஜூன் 2026"வளமான நாடு – அழகான வாழ்க்கை" என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் பிரஜாசக்தியின் "ஆயிரம் கிராமங்கள் – ஆயிரம் கருத்திட்டங்கள்" திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புனாணை கிழக்கு ரிதிதென்ன பிரதேசத்தின் AC-67 விவசாய வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 02 ஜூன் 2026 அன்று நடைபெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம். ஸாஹித், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல். சமீம், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எம்.ஏ.சி. நியாஸ்தீன் ஹாஜியார், புனாணை கிழக்கு பிரஜாசக்தி தலைவர் ஐ.எல். சமட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
வெலிக்கந்த மகாவலி வதிவிடத்திட்ட முகாமையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ரிதிதென்ன விவசாய அமைப்பு உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், விவசாய உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் ஊக்கமளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.























